01/10/2017

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்...


யார் இந்த பன்சாரிலால் புரோகித்?

1940 ஆம் ஏப்ரல் 16ஆம் தேதி பிறந்த இவருக்கு வயது 77.

மகாராஷ்டிரா விதர்பா தொகுதியைச் சேர்ந்தவர். முதலில் பாஜகவில் இணைந்த அவர், பின்னர் காங்கிரசில் சேர்ந்து, மீண்டும் பாஜகவிற்கே வந்து சேர்ந்தார்.

காங்கிரசில் இணைவதற்கு முன்பு, ஜனதா கட்சி மற்றும் ஃபார்வர்டு ப்ளாக் ஆகியவற்றின் ஆதரவாளராக இருந்துள்ளார்.

மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் இருந்து 3 முறை எம்.பியாக இருந்தவர். அதில் 2 முறை காங்கிரஸ் சார்பில் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர். ஒருமுறை பாஜக சார்பில் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்திரா காங்கிரஸ் உருவான போது, 1978ல் நாக்பூர் கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவானார். 2016 இல் அசாமிலும், 2017 இல் மேகாலயாவிலும் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருந்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.