20/10/2017

திமுக டிவி சேனலில், விளம்பரம்...


தீப ஒளித்  திருநாள் நிகழ்ச்சிகள்..
தீப ஒளித் திருநாள் சிறப்பு பட்டி மன்றம்..
தீப ஒளித் திருநாள் சிறப்புப் படம்..

இதிலென்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா..?

இந்த விளம்பரங்கள் இன்று வந்தது கலைஞர் டிவியில்..

'விடுமுறை  நாள்', 'தீப ஒளித் திருநாள்' ஆகி விட்டது..

இதற்கு மூன்று அர்த்தங்கள்..

1.  செக்யூலரிசம் என்றால் ஹிந்து மத நம்பிக்கைகளை மட்டும் கேவலப் படுத்துவது என்ற அறுபது வருட  கபடம் போதும்;  இனி மக்களை ஏமாற்றுவது சுலபமல்ல என்ற உண்மை திமுகவால் உணரப்படுகிறது..

2. திமுகவின் பழைய மூட சிந்தாந்தங்கள் உடைக்கப் படுகின்றன.. மக்களை குண்டுசட்டிக்குள் வைத்திருப்பதுதான் திராவிட அரசியல் என்ற எண்ணம்  மாறத் தொடங்குகிறது..

3. மாற்றங்களின் காரணம் - ஸ்டாலினின்  நல்ல மனமாற்றம் அல்லது, மாநிலத்தில் பிஜேபியின் வளர்ச்சி  பற்றிய அவரின் பயமா..?

மாற்றங்களை ஸ்டாலின் தைரியமாய் தொடர்வாரா..?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.