28/12/2017

பாஜக மோடி அரசின் கையாளாகத்தனம்...


ஒரு நாட்டின் விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கும் பட்சத்தில்..

அந்த நாட்டின் பணமதிப்பீடு என்பது
மற்ற நாட்டுடன் ஒப்பீட்டு பார்க்கையில்..

ஒன்றுக்கும் உதவாத பேப்பராக தான் இருக்கும்..

இதை அப்படியே இந்தியாவுடன் ஒப்பிட்டு பாருங்கள்..

ஒரு 60 வருடங்களுக்கு முன்பு 5000 ரூபாயில் திருமணம் செய்து விடலாம்..

20 வருடங்களுக்கு முன்பு 20 ரூபாய் இருந்தால் ஒரு நாள் சாப்பாடுக்கு போதுமானதாக இருந்தது..

ஒரு டீ ஒரு ரொட்டி துண்டு 3 ரூபாய்குள் முடிந்து விடும்..

ஒரு மாதத்திற்கு 5,000 இருந்தாலே போதுமானதாக இருந்தது..

7 வருடங்களுக்கு  முன் வயிறார சாப்பிட 12 ரூபாய் இருந்தது. இப்போது 100 க்கும் மேல் எப்படி வந்தது.

இப்படி வளர்ச்சி வளர்ச்சி என்று அதல பாதாளத்திற்கு போய் கொண்டு இருக்கிறோம் என்பதே நிதர்சன  உண்மை..

அதெப்படி அன்றும் அதே விளைச்சல் தான் இன்றும் அதே விளைச்சல் தான்.

அப்போது தக்காளி கிலோ 9 ரூபாய் இப்போது 40 ரூபாய்..

எவனோ சுரண்டி திங்க நாம் பலிகடா ஆகிறோம்..

இதை ஆதரித்து பேச மாநிலத்தில் நாலு அக்கட்சியை சார்ந்தவர்கள்.

அவர்களுக்கு கொடுக்கப்படும் எழும்பு துண்டுக்கு வேலை செய்கிறார்கள்.

இவர்களுக்கு கீழ் அப்பாவி தொண்டன் வேறு..

போதக்குறைக்கு சினிமா, மற்றும் ஊடகத்தின் நடுப்பக்கம், நடிகை வீட்டின் நாய், விஜய் டிவி ஆபாசங்கள்..

இவ்வளவையும் தாண்டி ஒருத்தன் பேசினால் என்றால்..

அவன் என்ன மதம்? இல்லைனா என்ன சாதி ?

இதைப்பற்றி ஆய்வு செய்து யூ ஆர் ய ஆண்டி இந்தியன் என்று ஒரே மூச்சில் சொல்லி விட்டு செல்வான்.

நமக்கு இது புரிவதற்குள் இடை தேர்தலோ நடிகையின் மரணமோ.. அல்லது ஆபாச ஆடியோவோ லீக் ஆகும்.

இதன் பின்னாடி முழு உலகமுமே ஓடுவது போன்று இந்தியாவின் அடுத்த தூண்கள் ஒளிபரப்பு செய்யும்.

தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்றுவதை விட அவர்களின் போராட்டதில் கிருஸ்துவ பாதிரிகள் ஏன் கலந்து கொள்கிறார்கள் என்று வீர வசனம் பேசத்தான் தெரியும்..

ஒரு அரசாங்கம் காப்பாற்ற வக்கு இல்லாமல் அடேய் எங்கள காப்பாத்துங்கடா என்று போராட்டம் செய்யும் அளவுக்கு போகிறது.

இதுவே உணக்கு கேவலத்தை தரக்கூடியது..

இதை மறைக்க கிருஸ்துவ பாதிரிகள் என்பதும் அவர்கள் பொய் கூறுகின்றனர் என்பதும்..

பொதுவாக தமிழக பகுதிகளில் சென்னை நொச்சிக்குப்பம் பட்டிணப்பாக்கம் போன்ற மீனவர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்பதும்..

அறந்தாங்கி மீமிசல் பகுதி மீனவர்கள் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதும்..

கன்னியாகுமரி மாவட்டம் மீனவர்கள் பெரும்பாலானவர்கள் கிருஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அடிப்படை அறிவு..

இதுக்கூட இல்லாமல் பேசுவது
மடைமையின் உச்சம்.

பிரதமர் கூட மீனவர்கள் சார்ந்த சந்திப்பில் கிருஸ்துவ பாதிரிகளை தானே சந்தித்தார் அப்படியானால் மோடி ஆண்டி இந்தியன் இல்லையா?

இதெல்லாம் அரசியல்..

அரசியல் சாக்கடை என்பதை கூறியே நம்மை அதைவிட்டு அந்த காலத்து அரசியல் வாதிகள் தடுத்து இருந்தனர். ஆனால் இதை புரிந்து கொண்ட இக்கால இளைஞர்கள் தகுந்த செருப்படி கொடுக்கும் போது அவர்கள் தேச விரோதிகள்.

நாம் நம்மை சிந்தனை ரீதியாக தீட்டப்பட வேண்டும்.

இந்த எச்சங்களை வைத்துக் கொண்டு நம்மை முட்டாள் ஆக்கி கொண்டு உள்ளது அரசு..

சமீபத்திய தகவல் : இரயிலில் ஜன்னல் ஓர இருக்கைக்கும் படுக்கை இருக்கைக்கும் விலையேற்றப்படுகிறதாம்.

இப்படி ஏற்றி ஏற்றி எவனுக்கு கொடுப்பனோ தெரியவில்லை,

வேதனையின் உச்சம்.
சாமானியனுக்கு கோபம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.