13/01/2018

கடத்தலுக்கு தயாராக இருந்த மணல் குவியல்கள் பரிமுதல்...


குடியாத்தம் பாலாற்றில் பட்டு கிராமத்தில் கடந்த பல மாதங்களாக மனள் கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்வதாகவும் இதனால் பாலாற்றில் வெள்ளம் வந்தால் தங்கள் கிராமம் முழுவதுமாக பாதிக்கப்படும் எனவும் அதனால் மணல் கொள்ளையை முழுவதுமாக தடுக்க வேண்டும் எனவும் அந்த  கிராம மக்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வந்தனர்.

அதனால், பேர்ணாம்பட் தாசில்தார் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அப்பகுதியில் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ஆற்றில்  சட்ட விரோதமாக திருடிய மணல்கள் லாரிகளில் கடத்த ஆங்காங்கே மணல் குவியல்களாக சேர்த்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்து அவற்றை முழுவதுமாக பரிமுதல் செய்து மாவட்ட ஆட்ச்சியரின் உத்திரவின் பெயரில் அரசு கட்டுமாண பணிக்கு பயன்படுத்த பொதுப்பணி துறையினரின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பரிமுதல் செய்த சுமார் 75, க்கும் மேற்ப்பட்ட மணல் குவியல்கள் பொதுப்பணித்துறையினர் லாரிகள் மூலம் சம்மந்தப்பட்ட அரசு  கட்டுமான  பணிகள்  நடக்கும்  இடங்களுக்கு  கொண்டு  சென்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.