13/01/2018

இசைக் கருவி தம்புரா...


இதில் நான்கு தந்திகள் இருக்கின்றன. நடுத்தந்திகள் இரண்டும் ஆதார சட்ச சுரத்தை ஒலிக்கின்றன. நான்கு தந்திகளையும் ஒன்றாய் மீட்டி வரும்போது முதலாவது தந்தியில் வருவது அந்த ஆதார சட்ச சுரத்திற்குத் தாழ்ந்த பஞ்சம சுரத்தை ஒலிப்பதாக சுருதி செய்தல் வேண்டும்.

கடைசியில் உள்ள நான்காம் தந்தியில் ஆதார சட்ச சுரத்திலும் தாழ்ந்த ச-ஒலிப்பதாய்ச் சுருதி செய்தல் வேண்டும்.

எனவே தந்திகளை மீட்டி வரும்போது அவை “ ப [தாரஸ்தாயி low octave]-ஸ-ஸ-ஸ [தாரஸ்தாயி low octave]-” என்று ஒலிப்பதாய் இருக்க வேண்டும்.

இந்த நான்கு தந்திகளின் ஒலிகளும் தனித்தனியே பிரிந்து ஒலிக்காமல் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் போது, பிரதான மெட்டின் மேல் நான்கு தந்திகளுக்கும் மெட்டிற்கும் இடையே துண்டு நூல்கள் செலுத்தி வைத்துக் கொள்ளப்படும்.

இதற்கு “சீவா” என்று பெயர். இது வண்டின் ஒலிபோல ரீங்காரத்துடன் தொடர்ந்து ஒலியாக கேட்கப் பெறும்.

இந்த “சீவா” என்ற ரீங்கார ஒலியினால் நன்றாக சுருதி சேர்க்கப் பெற்ற தம்புராவானது  “ரிகரிக” என்று ஒலித்து செவிப்புலனாகும். இது மிகவும் இனிமையாக இருக்கும்.

தம்புராத் தந்திகளின் சுருதி நன்றாக சேர்ந்திருப்பதற்கு இங்குக் கூறப்பெற்ற “ரிகரிக” என்று ஒலிக்கும் சிறப்பே குறிகாட்டியாகும்.

தம்புராவைப் பயன்படுத்திக் கொண்டு பாடி வரும்போது, ஒவ்வொரு சுவரமும் அதன் தானத்தில் வருகின்றதோ  என்பதை இசைப் போர் தெரிந்துக் கொண்டு பாடி வரலாம்.

பாடுவோர் பாடி நிருத்தியிருக்கும் காலத்தில் இத்தம்புராவின் ஆதார சுருதி ஒலியானது “சீவா” வின் தொடர்பால் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருப்பதால் அவர் பாடிக் கொண்டிருப்பதைப் போலுள்ள ஓர் உயர்ச்சியையும் அது உண்டாக்குகின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.