19/01/2018

வெயிலில் நின்று போராட வேண்டியதில்லை.. தொண்டை வறண்டு போக முழங்கமிட வேண்டியதில்லை. நிழலில் அமர்ந்து கொண்டு அரசாங்கத்தை வழிநடத்த இயலுமென்றால், அதற்கு ஒரே வழி கிராமசபை தான்...


கிராமசபை மூலம் நமது கிராமத்தின் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு  தீர்வுகளை ஏற்படுத்த முடியும்.

ஆனால் ஆக்கபூர்வமான தேவைகளுக்கு, நாம் ஒன்று சேர்வதில்லை என்பதற்கு கிராம சபையே சிறந்த உதாரணம்.

நமது கிராமத்தின் வளர்ச்சி சார்ந்த பணிகளை செயல்படுத்தவும், அவற்றை கண்காணிக்கவும் நம்மால் முடியுமென்றால், அதற்கான ஒரே அதிகாரம் கிராம சபை மட்டுமே..

ஜனவரி 26. உங்கள் கிராமத்தில், உங்கள் தேவைகளுக்காக நடக்கும் கிராம சபையில் கலந்து கொள்ளுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.