16/02/2018

கொடைக்கானலில் வனத்துறையினர் கொடூரமாக தாக்கியதாக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் கை கால் எலும்பு முறிந்த நிலையிலும், படுகாயத்துடனும் 9 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை...


மன்னவனூர் அருகே உள்ள வருவாய் நிலத்தில் சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருந்தவர்களை இது வனப்பகுதி என்று சொல்லி பணம் கேட்டதால்

தனியார் விடுதி ஊழியர்களுக்கும் வனத்துறைக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து 12 பேரை வனத்துறை அதிகாரிகள் வனப் பகுதிக்குள் அழைத்துச் சென்று சரமாரயாக தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு.

பயங்கரமாக தாக்கி துப்பாக்கி முனையில் வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும் குற்றச் சாட்டு.

இவர்களை விடுவிக்க லட்சக் கணக்கில் மாவட்ட வன அலுவலரின் பெயரைச் சொல்லி வனத்துறையினர் லஞ்சம் கேட்டதாகவும் குற்றச்சாட்டு.

தாக்குதலில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.