07/03/2018

பாஜகவால் லெனின் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் பல அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றது...


பாஜக வெற்றியை தொடர்ந்து திரிபுரா மாநிலத்தில் பதட்டம்.. ஏவ விட்டு  வேடிக்கை பார்க்கிறதா மத்திய அரசு ? மார்க்சிஸ்ட் கட்சியினர் புகார்...

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என ஹெச் ராஜா பதிவிட்டுள்ளது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து அமைதியாக வாழும் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டி விட்டு பாஜக குளிர் காய பார்க்கின்றது எனப் சமூக செயல்பாட்டாளர்களிடையே புகார் எழுந்துள்ளது.

ஒரு மாநிலத்தில் படுதோல்வி அடைந்து கூட்டணி கட்சியின் உதவியால் சொற்ப வித்தியாசத்தில் திரிபுராவில் வெற்றி பெற்றுள்ள பாஜக தம்பட்டம் அடிக்க கூடாது,  பாஜகவை எதிர்த்து திரிபுராவில் 45 சதவிகிதம் பேர் எதிர் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இன்றளவும் நோட்டாவை விட குறைவாக வாங்கியுள்ளதால் தமிழகத்தில் இருந்து கொண்டு ஹெச் ராஜா போன்றவர்கள் தம்பட்டம் அடிக்க எந்த முகாந்திரமும் இல்லை , என சமூக வலைதளத்தில் ஹெச் ராஜாவிற்கு பெரியாரிய செயல்பாட்டாளர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.