31/05/2018

இயற்கை என்றால் என்ன.. செயற்கை என்றால் எனன..?


இயற்கை என்பது பார்கின்ற உயிர்களை பெருத்தது...

ஒரு செயல் உருவாகுவதும் இயங்குதலும்  நமது கட்டுபாட்டிற்கு அப்பால் இருந்தால்  அது இயற்கை..

மனிதனின் பார்வையில் இருந்து நம்மால் உருவாக்கி இயக்க கூடியதை தவிர்த்து அனைத்தும் இயற்கை..

நாம் ஒரு செயலை உருவாக்கி அதன்
இயங்குதலை நாம் இயக்கினால் இது செயற்கை..

எடுத்துக்காட்டாக எறும்பு புற்றை எடுத்துக்கொள்வோம்..

எறும்பின் பார்வையிலிருந்து அந்த புற்று
காரணம் புற்றை உருவாக்குவது எறும்பு தான் பயன்படுத்துவதும் எறும்பு தான்
அந்த புற்றை  நமது பார்வையில் பார்த்தால்  இயற்கை காரணம் அதன் படைத்தலிலும் இயங்குதலிலும் நமது கைவண்ணங்கள் இருப்பதில்லை..

பிரபஞ்சத்தை படைத்தவனின் பார்வையிலிருந்து பார்த்தால் பிரபஞ்சத்தில் நடந்து கொண்டிருப்பது அனைத்தும் செயற்கை தான்.

இயற்கை செயற்கை என்பது பார்க்கும் ஜீவன்களின் பார்வையில் இருக்கு.

ஆனால் இயற்கை செயற்கை என பிரித்து உணரும் தன்மை இந்த உலகில் மனிதனிக்கே உள்ள வரமும் சாபமும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.