16/06/2018

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை மோசடி தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன். மாணிக்கவேல் மற்றும் உலோக பரிசோதனை நிபுணர் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்...


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 117 கிலோ எடையுடைய  சோமாஸ் கந்தர் சிலை இருந்தது. இந்த சிலை சேதமடைந்ததைத் தொடர்ந்து புதிதாக சிலை செய்யப்பட்டது. புதிதாக செய்யப்பட்ட சிலையில் தங்கம் சேர்ப்பதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், ஐஐடியின் உலோகப் பரிசோதனை நிபுணர் குழுவுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சிலைகள் எந்த காலத்தை சேர்ந்தவை எந்த வகையிலான உலோகத்தில் சிலைகள் செய்யப்பட்டன. சிலையில் எந்த அளவிற்கு தங்கம் உள்ளது என்பது குறித்து ஆவுகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராம் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.