25/06/2018

வூடு மாந்திரீகம்....


உலக மாந்திரீகத்தில் இரண்டாவது இடம் பிடிப்பது வூடு என்னும் மதத்தின் மாந்திரீகம் ஆகும். 

இது மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் தோன்றிய ஒரு மதமாகும். இந்த மதத்தைப் பின் பற்றுகிறவர்கள் வூடோசோ என்பர்.

இவர்களது மதத்தில் இறந்தவர்களை வணங்குவது, பில்லி சூனியத்தை உருவாக்குவது, பில்லி சூனியத்திற்கு எதிராக மக்களைக் காப்பாற்றுவது போன்ற பல முறைகள் உள்ளது. இவர்கள் மாந்திரீக முறைகளிலும், இந்திய முறைகள் போல் மந்திரங்கள், தந்திரங்கள், சடங்குகள் போன்றவை உள்ளன. இவர்கள் முறையிலும் கடவுள் என்று ஒருவர் உண்டு என்ற நம்பிக்கை காணப்படுகிறது. இவர்கள் முறையிலும் இங்கு உள்ள மாந்திரீக முறைகளான மஞ்சள் பாவை, மாபாவை, மரப்பாவை போன்றவைகள் போல் அவர்களும் துணிகளை வைத்து பாவைகள் உருவாக்கி மாந்திரீகம் செய்யும் முறை இருக்கிறது. இவர்கள்  மாந்திரீகம் செய்யும் பொழுது இசைகளுடன் ஆடிப்பாடி மகிழ்வர். இது அவர்களுக்கு மன ஒருமைப்பாடை கொடுக்கும் என்று நம்புகின்றனர்.

இந்திய மாந்திரீகத்தில் கணக்குகள் பொதுவாக சூரியனைச் சார்ந்ததாக இருக்கும். ஆனால் வூடு மதத்தைச் சார்ந்த மாந்திரீகத்தில் சந்திரனை கணக்காக எடுத்துள்ளனர். பொதுவாக இவர்களில் ஆண் மந்திரவாதியும், பெண் மந்திரவாதியும் அதிகம். இவர்கள் தங்கள் சக்தியை இறந்த முன்னோர்கள் மூலம் பெறுவதாக நம்பிக்கை உடையவர்கள். அவர்கள் மூலம் அதிதீவிர சக்தியைக் கொண்ட கடவுளை அணுக முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். இந்த வூடு மாந்திரீக முறையில் மாந்திரீகம், மந்திரம், தந்திரம், மருத்துவம் ஆகியவற்றை ஒன்று போல் செய்கின்றனர்.
 
மருத்துவம் என்றால் ஆப்பிரிக்க நாட்டின் பச்சை இலை மருத்துவம் ஆகும். இத்தகைய வூடு மதத்தைச் சார்ந்த வைத்தியர்கள் உலகெங்கும் பரவிக் கிடக்கின்றனர். அமெரிக்கா நாட்டில் உள்ள பெரும் செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் தங்கள் காரியங்களை நிறைவேற்ற அவர்களிடம் செல்வதுண்டு. சிலர் ஆப்பிரிக்காவில் நடுக்காட்டில் வசிக்கும் வூடு வைத்தியர்களைச் சென்று பார்க்கும் பழக்கம் உண்டு. அவர்களும் வூடு பொம்மை மீது ஆணிகள் அடித்து காரியங்களை நிறைவேற்றுவதாக ஒரு ஐதீகம் உள்ளது.

இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் இவர்கள் மாந்திரீக முறைகள் அனைத்தும் என் அறிவுக்கு உட்பட இந்திய நாட்டு மாந்திரீக முறையைக் காட்டிலும் சிறந்தது என்று கூற முடியாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.