01/07/2018

குடிப்பழக்கத்தால் ஒட்டு மொத்த குடும்பத்தையே விற்ற நபர்.. சொந்த அண்ணனுக்கு மனைவி, மகள்களை விற்றார்...


ஆந்திராவின் கர்னூல்  மாவட்டம் கோயிலகுண்ட்லா பகுதியை சேர்ந்தவர் பசுபுலேதி மட்டிலேட்டி. இவரது மனைவி வெங்கடம்மா. இவர்களுக்கு  5 மகள்கள். 

ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் கடந்த 3 வருடத்திற்கு முன்பு பசுமலேதி மட்டிலேட்டிக்கு ஏற்பட்ட குடிபழக்கத்ததால் நாசமானது. குடிப்பழக்கத்திற்கு ஆளா£ன மட்டிலேட்டி தனது 10 வயது மகளை உறவினர் ஒருவருக்கு 1.5 லட்சத்திற்கு விற்றுள்ளார்.

அதாவது தனது மகள் பெரியவளானதும் உறவினருக்கே திருமணம் செய்து வைப்பதாக கூறி பணத்தை பெற்றுள்ளார். இது குறித்து குடும்பத்தார் யாருக்கும் தெரியாது.

இந்த நிலையில் கடந்த மாதம் தனது சொந்த அண்ணனுக்கு மனைவி மற்றும் 4 மகள்களை 5 லட்சத்திற்கு விற்றுள்ளார். கடந்த மாதம் மட்டிலேட்டியின் அண்ணன் வந்து மனைவி மகள்களை விற்றது குறித்து முறைப்படி பத்திரம் எழுதி கொடுக்க வேண்டும் என கேட்டபிறகுதான் இந்த விஷயமே குடும்பத்தாருக்கு தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து வெங்கடம்மா தனது மகள்களை அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் புகாரை ஏற்று கொள்ளவில்லை. இதனால் அவர் ஐசிடிஎஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்ததை அடுத்து இந்த விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. போலீசாரும் இது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.