15/07/2018

வேலூரில் நிருபர்கள் எனக் கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்ட இருவரை கையும், களவுமாக போலீசார் கைது செய்தனர்...


தரணம்பேட்டை பகுதியை சேர்ந்த முகமத் ரிஸ்வான் மற்றும் சையது அர்ஷத் ஆகிய இருவரும், முன்னணி செய்தி தொலைக்காட்சியின் நிருபர்கள் எனக் கூறி பேரணாம்பட்டு பகுதியில் உள்ள அரசு உருதுப் பள்ளிக்குச் சென்று உதவி தலைமை ஆசிரியரை மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளனர். அவர்கள் மீது சந்தேகமுற்ற உதவி தலைமை ஆசிரியர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்த போது, போலி நிருபர்கள் எனத் தெரிய வந்தது. விசாரணையின் போது முதலில் கெத்து காட்டிய முகமது ரிஸ்வான் என்பவர் பின்னர் கதறி அழுது விட்டார். இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.