19/08/2018

இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ...


பெண் விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை என்கிறார் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின்
முதலாவது பயிற்சிமுகாம் அதிகார பூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கி வைக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர்.

மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.

இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின் முதலாவது உயிர்ப்பலி நிகழ்ந்தது.

தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் பிரிவு விடுதலைப்புலிகளின் சகல வேலைத்திட்டங்களிலும் படையணிகளிலும் பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.

கடல் மற்றும் தரைக் கரும்புலிகளாகவும் பெண்புலிகள் பலர் வீரச்சாவடைந்துள்ளனர்.

தமிழரின் தேசம் அடையும் விடுதலை பயணத்தில் பெண் புலிகளின் பங்களிப்பு மகத்தானது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.