19/08/2018

பிரபஞ்சமும் நன்றியும்...


உலக புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் தனக்கு முன்னால் வாழ்ந்த அறிவியல் அறிஞர்களுக்கு ஒரு நாளில் நூறு முறை மேல் நன்றியுணர்வை வெளிபடுத்துவார்..

இயேசு கிறிஸ்து தான் செய்யும் ஒவ்வொரு அற்புதத்திற்கு முன்னரும் நன்றி சொல்லி தொடங்கினார்...

உலக புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஐசக் நியூட்டன் தன் அறிவியல் கண்டுபிடிப்புகளை பற்றி கூறும்போது பல அறிவியல் அறிஞர்களின் தோளில் ஏறி சாதித்தாக குறிப்பிட்டார். ஒரு நாளில் குறைந்தது நூறு முறையாவது நன்றியுணர்வை வெளிபடுத்தினார்.

எண்ணற்ற மகான்களும், அறிவியல் அறிஞர்களும், வாழ்வில் சாதித்தவர்களும் தங்கள் வாழ்வில் ஒரு நாளில் நூறு முறைக்கு மேல் நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளார்கள்..

நீங்கள் ஒரு நாளில் குறைந்தது நூறு முறையாவது நன்றியுணர்வை மற்றும் அன்பை வெளிப்படுத்தி உணரும்போது உங்கள் நாள் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக மாறுகிறது....

நீங்கள் செல்லுமிடமெல்லாம் மாயஜாலம் நிகழ்கிறது.... நீங்கள் சாலையில் பார்க்கும் வார்த்தைகள் அனைத்தும் உங்களை மகிழ்விக்கிறது.

உங்களை சுற்றி நடக்கும் ஒவ்வொரு செயலும் , சூழ்நிலையும் உங்களை எப்போதும் சந்தோஷமான சூழ்நிலையிலே வைத்திருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.