29/08/2018

விஜய் மல்லையா இன்று ஆஜர்?


வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், வெளிநாட்டுக்கு தப்பியோடிய, தொழிலதிபர் விஜய் மல்லையா, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில், இன்று நடக்கும் விசாரணையில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையா, 'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம் துவங்க, நாட்டின் பல்வேறு வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கினார். அதை திருப்பிச் செலுத்தாமல், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனுக்கு தப்பியோடினார். அவருக்கு எதிராக, அமலாக்கத்துறை, சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து, இரு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.