29/08/2018

வாசுதேவ நல்லூர்ப் போரின் வரலாறு...


தமிழ் மக்கள் உண்மையில் பெருமைப்படக் கூடிய ஒரு வீர காவியமாகும்...

அப்போரில் ஈடுபட்ட தமிழர்களின் வீரத்தை கண்டு வெள்ளைத் தளபதியாகிய காம்பெல்லே வியப்பில் ஆழ்ந்தான்..

28. 5. 1767 ல் அவன் சென்னையிலுள்ள கும்பினி கவர்னருக்கு எழுதிய ஒரு கடிதம்..

இன்றளவும் அந்த கடிதம் எழும்பூர் ரிகார்டு ஆபீசில் உள்ளது...

வாசுதேவ நல்லூர் என்ற புலித்தேவன் கோட்டையை தாக்குமாறு இன்று நம் படைக்கு உத்திரவிட்டேன் . பீரங்கிக் குண்டுகளாகலேயே கோட்டையைத் தகர்க்க முடியவில்லை.

குண்டுப்பட்ட இடங்களில் ஓட்டைகள் மட்டுமே விழுந்தன.

ஓட்டைகளைப் புலித்தேவன் வீரர்கள் பச்சை மண்ணும் பனைநாரும் கொண்டு அப்போதைக்கப்போது அடைத்து விட்டார்கள். விடாது சுட்டுத்தள்ளச் சொன்னேன்.

ஓட்டைகளை தமிழர்கள் தங்கள் உடல்களாலேயே அடைத்து நின்றார்கள்.

சுட்ட இடங்களிலெல்லாம் மண்ணும் நாரும் எப்படிச் சிதறுமோ, அப்படியே புலித்தேவன் வீரர்கள் அஞ்சாமல் தங்கள் பணியைச் செய்வதைக் கண்டு என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

நாகரிகம் குறைந்தவர்கள் என்று நம்மால் கருதபடுகிற தமிழர்களின் வீரம் நம் ஐரோப்பியர்களின் வீரத்திற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல…

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.