29/08/2018

ஜான்சன் அண்ட் ஜான்சன் பொருட்களை தவிரித்திடுங்கள்...


கடந்த பிப்வரியில் மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. அந்த குழு 12 மாதங்களாக ஆய்வு செய்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.

அரசின் அறிக்கையின்படி, இம்மாற்று செயற்கை இடுப்பு எலும்புகள் 3,600 பேருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் வைக்கப்பட்டன. ஆனால், இவர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 254 பேருக்கு மறுபடியும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 2017இல் அமெரிக்காவில் இக்கம்பெனியின் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் 8,000 பேருக்கு 2.47 பில்லியன் டாலர்கள் இழப்பீடாக அளிக்கப்பட்டது. ஆனால், இதே இழப்பீடு இந்தியாவிலுள்ளவர்களுக்கு அளிக்கப்படவில்லை என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து கேட்டதற்கு அந்த கம்பெனி எந்தத் தகவலும் அளிக்கவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் தரப்படவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.