20/09/2018

2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள்...


பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் மக்கட்தொகைக் கணக்கீட்டின் படி தமிழகத்தின் மக்கட்தொகையானது தமிழகப் பிறப்பு விகிதத்தின்படி 51 லட்சம் தான் அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழக மக்கட்தொகை பத்தாண்டுகளில் 97 லட்சம் அதிகரித்துள்ளது.

அதாவது கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 50 லட்சம் பேர் தமிழகத்தில் குடிபுகுந்து ரேசன் கார்டு வாங்கியுள்ளனர்.

அதனாலேயே தமிழக குடிமக்களின் எண்ணிக்கை அரைக் கோடி கூடுதலாக அதிகரித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலோர் வடயிந்தியர் ஆவர்.

சென்னையையும் கோவையையும் குடியேறி நிறைத்த பிறகு தற்போது மதுரையை குறிவைத்துள்ளனர்.

மதுரையைச் சுற்றியுள்ள மாசி வீதிகளிலும் சித்திரை வீதிகளிலும் உள்ள அனைத்து கடைகள், கட்டிடங்கள், நிறுவனங்கள் அனைத்தையும் மார்வாடிகள் விலைக்கு வாங்கிவிட்டனர்.

இதற்கு காரணம் குஜராத்திய மக்களான சௌராஷ்டிர மக்கள் மதுரை முதல் திருமங்கலம் வரை தொடர்ச்சியாக பெரும்பான்மையுடன் குட்டி தாய்நிலம் அமைத்து வாழ்வதுதான்.

இங்கே தற்போது பெருகியுள்ள பாஜக ஆதரவும் மதுரை மார்வாடிகளின் பணமும் சேர்ந்து திட்டமிட்டு மதுரையில் ஹிந்தியரைக் குடியேற்றி மதுரையைத் தமக்குச் சொந்தமாக்கப் பார்க்கின்றனர்.
 
மதுரையில் குறிப்பிட்ட வார்டுகளில் வடயிந்தியரைக் குடியேற்றி வருகின்றனர்.

அங்கே மார்வாடிகளை நிறுத்தி வெற்றிபெற வைக்கவுள்ளனர்.

மதுரை 79 வது வார்டில் 600 பேராக இருந்த வடயிந்திய வாக்காளர்கள் தற்போது 4000 பேராகியுள்ளனர்.

இதேபோல 58 வது வார்டில் 7000 பேர் இருக்கிறார்கள்.

மதுரை மத்திய தொகுதியில் 20,000 வடயிந்திய வாக்காளர்கள் உள்ளனர்.

(இதிலே 18 வயதுக்கு குறைந்தோர் மற்றும் குடியுரிமை பெறாதோரைச் சேர்க்கவில்லை).

அதாவது ரேசன்கார்டு வாங்குவதற்கு நிரந்தர முகவரி தேவை அதனால் இப்போதெல்லாம் வடயிந்தியர்கள் முதலில் வாக்காளர் அடையாள அட்டை வாங்கிவிடுகின்றனர்.

2016 செப்டம்பர் 1 அன்று மத்திய பா.ஜ.க அரசு தமிழக அரசின் மீது அழுத்தம் கொடுத்து ஓ.பன்னீர்செல்வம் மூலம் தமிழ் தெரியாதோரும் வெளிமாநிலத்தவரும் வெளிநாட்டவரும் கூட தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் சலுகையை அறிவித்தது.

(இதை தமிழ்தேசிய பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன் கடுமையாக எதிர்த்தது நினைவிருக்கலாம்).

கடந்த ஆண்டில் அரைகோடி பேர் குடிவந்தனர் என்றால் இந்த சலுகை இன்னும் பத்தாண்டுகளில் ஒரு கோடிபேர் குடிபுக வழிசெய்யும்.

மெல்ல மெல்ல தமிழர்கள் இங்கே சிறுபான்மை ஆக்கப்படுவர்.

தாய்நிலத்திற்கு ராணுவ வேலி போடாத இனத்திற்கு அதுதான் நடக்கும்.

சில தகவல்களுக்கு நன்றி: நக்கீரன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.