10/09/2018

கணவர் இறந்த துக்கம் தாளாமல் குழந்தையை கொலை செய்து தாய் தூக்கிட்டு தற்கொலை...


சேலம் அருகே கணவன் இறந்த துக்கம் தாளாமல், குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த தாய், தானும் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் அருகேயுள்ள மாசிநாயக்கன்பட்டி சக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். மின் மோட்டார்களை பழுது பார்க்கும் வேலை செய்து வந்த அவர், கடந்த 6 மாதத்திற்கு முன்பு கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

கண்ணனின் மனைவியான பிரேமா, தனது குழந்தையுடன் மாசிநாயக்கன்பட்டியிலேயே வசித்து வந்தார்.

ஆனால் கணவர் இறந்த துக்கத்தில் இருந்த பிரேமா, தான் தற்கொலை செய்யப்போவதாக உறவினர்களிடம் கூறிவந்தாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு பிரேமா தனது குழந்தை அஜயை வீட்டு முன்பு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்றார். பின்னர் வீட்டுக்குள் சென்ற அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொலை மற்றும் தற்கொலை குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.