10/09/2018

திமுக-வில் கோஷ்டி பூசல் அடிதடி, மருத்துவமனையில் ஒருவர் அனுமதி...


கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் திமுகவில் உட்கட்சி பூசலால் அடிதடி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தேன்கனிக்கோட்டை திமுக நகர மாணவரணி அமைப்பாளராக இருப்பவர் லிங்கோஜ் இவர் தளி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பிரகாஷ் அவர்கள் இன்று தேன்கனிக்கோட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திர திறப்பு விழா நடைப்பெற இருந்த நிலையில் பொது இடத்தில் பொது மக்கள் பயப்படும் வகையில் பட்டப்பகலிலே திமுக பிரமுகர் 12வது வார்டை சேர்ந்த பேக்கரி நஞ்சப்பா மற்றும் அவரது உறவினர் புட்ராஜ் என்பவரால் தாக்கியதில் லிங்கோஜ் காயமடைந்து தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது சம்பந்தமாக தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.