06/10/2018

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்...


சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அக்டோபர் 7ஆம் தேதி அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதனை கண்காணிக்கவும் சென்னையிலுள்ள 15 மண்டலங்களுக்கும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமிக்கப்பட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகளும் இன்று முதல் பணிகளை தொடங்கவிருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.