06/10/2018

மறுபிறப்பு...


பரப்பிரம்மத்தின் பிம்பமாக பிறப்பெடுத்த நாம் உலக மாயைகளில் சிக்கி கர்ம வினைகளை சேர்த்து மறுபிறவிக்கு வித்திடுகிறோம்.

தூய ஆத்மா நாம் செய்யும் பாவ புண்ணியங்களை சுமந்து கொண்டு மறுபிறப்பெடுகிறது.

நாம் செய்யும் பாவம் இரும்பு விலங்கிட்டு நம்மை மறுபிறவிக்கு கூட்டி செல்லும்.

நாம் செய்யும் புண்ணியம் பொன் விலங்கிட்டு மறுபிறவிக்கு அழைத்து செல்லும்.

உலக பற்று நீங்கும் வரை நமது பிறப்பு தொடர்கதை தான்.

வினை விதைத்தவன் நிச்சயம் அதை அறுத்தே தீருவான்.

இதை முன்பே நமக்கு கடவுள் கூறி அனுப்பி இருந்தால் அன்பை மட்டுமே வாழ்கை ஆக்கி இருப்போம்.

உலகபற்றுதலில் இருந்து எப்பொழுது மனம் விடுபடுகிறதோ அதுவே நமக்கு கடைசியாகி நமது இந்த அற்புதமான பிறப்பு ஓரு முடிவுக்கு வருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.