01/10/2018

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


நாகர்கள் என்பவர்கள் பற்றி மஹாபாரத காலம் முதல் கேட்டு வருகிறோம்.

நாகர்கள், மஹாபாரத சண்டைக்குப் பின்னர், தென் அமெரிக்காவில் குடியேறி, காண்டவ வனத் தலைவன் குகிள்கான் என்பவனின் தலைமையில் புதிய மாயா நாகரீகம் ஸ்தாபித்ததை
ஆரம்பத்தில் இருந்தது பார்த்தோம். இந்த குகிள்கான் யாரென்றும் கூறியிருந்தேன்.

மாயாக்களின் பிரதான தெய்வம் கொட்சகொட்ல (பறக்கும் பாம்பு). இது ஊர்வன வேற்றுகிரக மற்றோரு இனத்தின் திரிபாக இருக்கலாம்.
மேலும் இந்திய வேதங்கள் மற்றும் புராணங்களில் கூறப்படுகிறது நாகர்கள் என்ற இனம், ஊர்வன வேற்றுகிரக உயிரினங்களின் இரத்த கலப்பினங்களா கூட இருக்கலாம். நாகர்கள் எனப்படும் இந்த இனங்கள்  இந்திய பெருங்கடலில் கடல் அடியில் மூழ்கியுள்ள ஒரு கண்டத்தில் வாழ்ந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. அவைதான் நாகலோகம் என்று கூட இந்திய நூல்கள் கூறிப்படுகிறது.

இந்திய வழக்கிலுள்ள "சர்பா" என்ற வார்த்தை வேற்றுகிரக ஊர்வன இனத்தை தான் குறிப்பிடுகின்றன. இந்தியாவின் சைட்டோரியஸ் என்பது பாம்பு போன்ற மூக்கு மற்றும் மூங்கில் போன்ற கால்கள் உடைய ஊர்வன மனிதர்களில் ஒரு பழங்குடிகளே..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.