30/10/2018

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


மிகவும் பிரபலமான சதிக் கோட்பாட்டு வலைத்தளங்களில் ஒன்றுக்கு பின்னால் ஒரு யுஎஃப்ஒ ஆராய்ச்சியாளர், "மென் இன் பிளாக்" என்றழைக்கப்படும் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை வெளியில் எடுத்துக்கூற முயற்சித்து வருகிறார்.

வேற்றுகிரகவாசிகள் இருப்பதைக் காட்டிலும் அரசாங்கத்தின் முக்கிய பணி இவர்களை பற்றிய தடயங்களை மறைப்பது தான். ஏனென்றால் இது உலகை ஆள்பவர்களுக்கு சங்கடத்தை விளைவிக்கும். மேலும் மதம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் முறிவுக்கு வழிவகுக்கும்.

புதன் கிரகத்தின் மேற்பரப்பில் வேற்றுகிரக கட்டடங்களின் சான்றுகள் இருப்பதை நாசா விண்வெளி ஆய்வுப் படங்களில் கண்டறிந்ததைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். புதன் கிரகத்தில் அவர்கள் நெருக்கமான கட்டமைப்புகளில் உள்ளனர். அவர்கள் மேற்பரப்பில் அல்லாமல் கீழே ஆழமாக உள்ளனர். தேவை கருதியே மேற்பரப்புக்கு வருகின்றனர்.

மேலும் அதன்  வெப்பம் நிலை, பகல் நேரத்தில் 800 டிகிரி பாரன்ஹீட் (430 டிகிரி செல்சியஸ்) மற்றும் இரவில் வளிமண்டல -90 டிகிரி ஃபெரேன்ஹீட் (-180 டிகிரி செல்சியஸ்) வெப்பம் அதன் வளிமண்டலத்தில் அடைந்தாலும் கூட. அங்கு, பூமி போன்ற விலங்குகள், புதைபடிவங்கள், அழிந்துபோகும் கட்டிடங்கள், மற்றும் வேற்றுகிரக மனிதர்கள், உள்ளனர் என்பதற்கான சான்றுகள் NASAவிடம் உள்ளன என்று அவர் கூறுகிறார்.

ஆனால் சந்தேகத்திற்கு இடமில்லாமல், இந்த படங்கள் மூளை செய்யும் தந்திரங்கள் என்றும், பொதுவாக கண்கள் மேகங்கள் அல்லது பாறையின் மேற்பரப்பில் உள்ள முகங்களைப் பார்க்கும் போது, ​​அவைகள் கண்களின் காட்சிபிழையாக இருக்ககூடும் என்கின்றனர். நம் சூரிய மண்டலத்தில் வேற்றுகிரக வாழ்வின் அடிப்படை வடிவங்களைக் கூட இதுவரை தாங்கள் கண்டுபிடிக்கவில்லை என்று நாசா மறுக்கிறார்.

அமெரிக்க அரசாங்கம் யுஎஃப்ஒ பற்றிய ஆய்வுகளில் ஆர்வமற்றதாக இருப்பதாகவும், வேற்றுகிரக உயிரினங்கள் சத்தியத்தை தேடுபவர்களுடைய வேலையை இடை மறுக்கிறது என்றும் கூறுகிறார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.