22/11/2018

மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் காவல்துறையினருக்கு...


நாயை அடிப்பதுபோல் அடித்து, சட்டையைக் கிழித்துக் கைது செய்றாங்க. வீடு வீடாகப் புகுந்து கதவை உடைத்து, லத்தியால் அடித்து இழுத்துட்டு வர்றாங்க! ஊருக்குள்ளயே விரட்டி விரட்டிக் கைது செய்றாங்க! காரணம், அந்த மக்கள் தங்களுக்கு நிவாரணங்கள் வரவில்லை... அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்று அமைச்சர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்ததுதான்.

அந்தப் பெண்களும், பெரியவர்களும் அப்படிக் கதறி அழுறாங்க... வீடுகளை, வாழ்வாதாரங்களை இழந்து நிற்பவர்களுக்குச் சோறு தண்ணீர் கொடுப்பதெல்லாம் அரசின் கடமைதானே... அதை நீங்க கொடுக்கலைன்னா அவர்கள் கேட்கத்தான் செய்வார்கள்.

காவல்துறை அதிகாரிகள் எல்லாம் காக்கிச்சட்டையை அணிந்துவிட்டால், தங்களின் மனசாட்சியைக் கழற்றிக் குழிதோண்டிப் புதைத்து விடுவார்கள் போல. ஏற்கெனவே சோறு தண்ணீர் இல்லாம, நரக விளிம்பில் நிற்பவர்களை நாயை அடிப்பதுபோல் அடிக்கிறோமே என்ற சிறு உறுத்தல் கூடவா உங்களுக்கு இல்லை? என்ன மனுஷன்யா நீங்க.

அங்கு கதறி அழும் தாய்மார்களின் சாபங்களும், குழந்தைகளின் கதறல்களும் ஆட்சியாளர்களையும், அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யும் அனைவரையும் நாசமாக்கியே தீரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.