28/11/2018

சூரிய கிரகண ஆச்சரியங்கள்...


கதிரவன் எரியும் நெருப்புக்கோளம் என்றுதான் நாம் பொதுவாக நினைத்து கொண்டு இருக்கிறோம், ஆனால் அது எல்லையற்ற ஆற்றுலும், துடிப்பும், வெறியும் மிக்க உயிருள்ள பிராணி.

அது அடிக்கடி தனது மனநிலையை மாற்றி கொள்கிறது! சிறிதளவு அதன் மனநிலை மாறினாலும், பூமியின் உயிர்களை பாதிக்கிறது..

கதிரவனில் எதுவும் ஏற்படாமல் பூமியில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை.

சூர்ய கிரகணம் ஏற்பட்டால் கானகப் பறவைகள், இருபத்து நான்கு மணிநேரத்திற்கு முன்பே வாயடங்கி போய் விடுகின்றன, பயம் சந்தேகம் ஆகியவற்றால் நடுநடுங்கி மெளனம் சாதிக்கின்றன.

குரங்குகள் மரங்களை விட்டிறங்கி தரைக்கு வந்து கும்பலாய் பாதுகாப்பு ஓன்று கூடி அமர்ந்து விடுகின்றன. எப்போதும் சேட்டையும் கூச்சலுமாக பரபரப்பாய் இருக்கும் அவை, கிரகண காலத்தில் கடைபிடிக்கும் அமைதியை போல், தியானம் செய்பவர்கள் கடைபிடிக்க மாட்டார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.