21/11/2018

ஆசை தான் எங்களுக்கும்...


கூரை வீட்டில் இருந்தாலும் மாளிகை வீட்டில் வாழ்கிறேன்.

இன்றைய தினம் கூலி நாளை  உணவுக்கு.

உரங்க வீடு இல்லை இருந்தாலும் சாலைகள் இருபக்கம் சொர்க்கம்.

ஆயிரம் நோய்கள் பட்டாலும் மனது மட்டும் கம்பீரமாக மகிழ்ச்சியில் நோயை கடந்து செல்கிறேன்.

உடுத்த உடை என்றாலும் கிழிந்த துணியே எனக்கு மிகவும் பிடித்த உடை.

ஆயிரம் போக்குவரத்து வரத்து இருந்தும் செருப்பு அணியா எனது இரண்டு கால்களே எனது பறவை.

சொர்க்கம் கூட தள்ளிபோகும்  எங்கள் வீட்டில் இருக்கும் பழைய சோரும் வெங்காயமும்.

நேற்றைய கவலையும் இல்லை.. நாளையை ஆசையும் இல்லை..

நாங்களே சொர்க்கத்தில் வாழ்கிறோம்.

நான் கடந்து பார்த்து வளர்ந்து வந்த சில வரிகள் மட்டுமே..

இன்னும் பல வரிகள் உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.