13/11/2018

தமிழகம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது...


தேனி மாவட்டம் பள்ளி ஆசிரியையம் அவரது கணவரும் மகளும் காய்ச்சல் பாதிப்பால் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள்.

அவரது மாமியாரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு இறந்து போனார். உறவினர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஆனாலும் கூட சுகாதார நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

தொடர்ந்து மாத்திரைகள் தரப்பட்டாலும் மாத்திரைகளின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது.

அரியலூர் நாகப்பட்டினம் கடலூர் விருத்தாச்சலம் போன்ற பல இடங்களில் பலி எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.

30 சதவீத கமிஷன் அடிப்படையில் வாங்கப் படுவதால் மருந்து எந்தவகையிலும் மக்களுக்கு பயனுள்ளதாக இல்லை.

 நாமக்கல்லில் இரண்டு வயது குழந்தை இறந்திருக்கிறது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் கிராமங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் 200 புதிய மர்ம காய்ச்சல் நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வருவதாக செய்திகள்..

மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஆறு வார்டுகள் மட்டும்தான் உள்ளன என்கிறார்கள்.

காய்ச்சல் தொடர்பான சிகிச்சை அளிக்கும் வார்டுகள் எல்லா அரசு ஆஸ்பத்திரிகளிலும் குறைவாக இருக்கின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு எல்ஐசி அலுவலர் உட்பட இருவர் பலியானார்கள்.

மதுரை கீழக்குயில்குடி சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்திலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டைச் சுற்றியே சாக்கடை ஓடுகிறது.

பல அரசு மருத்துவமனைகளில் சாக்கடை நீர் தேங்கி உள்ளது.

அரசு தரும் மருந்து மாத்திரை தரம் குறைந்தவை.

டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பற்றிய எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் அரசு செயல்படுகிறது.

மழை மேலும் மிரட்டினால் என்ன் ஆகுமோ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.