07/11/2018

எங்களை எதிர்த்தால் கூட்டு பலாத்காரம் செய்து விடுவோம்.. பெண் காங்கிரஸ் தலைவருக்கு மிரட்டல்...


கோவா காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவர் தியா ஷேத்கர். இவர் காவல் நிலையத்தில் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் சுபாஷ் சிரோத்காரின் ஆதரவாளர் ஒருவர் எனக்கு போன் செய்தார்.

அவர் என்னிடம் மிகவும் ஆபாசமான வார்த்தைகளை பிரயோகித்தார். பின்னர் சிரோத்காரின் தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்தால் கூட்டு பலாத்காரம் செய்து விடுவோம் என்று மர்ம நபர் தெரிவித்ததாக தியா புகார் அளித்தார்

அக்டோபர் மாதம் சிரோத்கார் பாஜகவில் இணைந்தார். தியாவின் புகாருக்கு சிரோத்கார் எந்த பதிலையும் அளிக்கவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.