22/12/2018

கஜா புயல்: கடன்களை ரத்து செய்த டீக்கடைக்காரர்...


புதுக்கோட்டை:கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டையில் உள்ள டீக்கடை உரிமையாளர் சிவக்குமார், வாடிக்கையாளர்களின் கடன்களை ரத்து செய்து மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

ரத்து அறிவிப்பு...

ஆலங்குடி அருகே வம்பன் நான்குரோடு பகுதியில் பகவான் டீக்கடை வைத்திருப்பவர் சிவக்குமார். கஜா புயல் எதிரொலியால் தனது கடையில் கடந்த எட்டு ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் வைத்திருந்த கடன்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

அறிவிப்பை கடை முன் அட்டையில் ஒட்டி தொங்கவிட்டுள்ளார். சிவகுமாரின் மனிதாபிமானத்தை மற்ற கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் பாராட்டுகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.