24/01/2019

இமாச்சலில் நீடிக்கும் உறைபனியால் இயல்பு வாழ்க்கை முடக்கம்...


குளிர்காலம் தொடங்கிய நாள் முதலே, இமாச்சல பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் பனியின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிம்லா, மணாலி உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி நிலவுவதால் வீடுகள், சாலைகள், மரங்கள், மலைகள் என காணும் இடமெல்லாம் பனி போர்வை போர்த்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

சாலைகள் படர்ந்துள்ள பனிக்கட்டிகளால் போக்குவரத்து வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், சாலைகளில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.