09/01/2019

குழந்தை ஏன்டி எனது சாயலில் இல்லை.. அரக்கனாக மாறிய தந்தையின் கொடூர செயல்...


திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

பெட்டிக்கடை வைத்திருக்கும் கார்த்திகேயனுக்கு மனைவியின் நடத்தை  மீது சந்தேகம் இருந்தது. இதனால் திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி கருத்தரித்து எப்படிஎன்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், குழந்தை பெற்ற பின்னர் ராஜேஸ்வரி கொழுந்தம்பட்டில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து காம்பாட்டு கிராமத்திற்கு சென்றார். வழக்கம் போல மனைவியுடன் சண்டை போட்ட கார்த்திகேயன், குழந்தை தனது சாயலில் இல்லை என்று தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு கார்த்திகேயன் தனது குழந்தையை அரிவாளால் தலையில் வெட்டினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.

அவர்கள் வருவதற்குள் கார்த்திகேயன் குழந்தையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தார். கொடூர தந்தை கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.