09/01/2019

திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயக விரோதம்...


இன்றைக்கு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வருகிற நிலையில் தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக இந்த முடிவு எடுத்தது ஏன்?

மத்திய அரசு காரணமா? அல்லது மாநில அரசா?

தேர்தல் அறிவிக்கும் போது கஜா நிவாரண நடைமுறை தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா?

அப்படி என்றால் அது என்ன தலைமை தேர்தல் கமிஷன்?

இன்று சுப்ரீம் கோர்ட்டில் 3 வழக்குகள் வருகின்றன. கோர்ட் தடை விதிக்காது என்று தேர்தல் ஆணையம் பயந்து இருக்கிறது.

எனவே தான் அது தன்னிச்சையாக தேர்தலை ரத்து செய்து அறிவித்திருக்கிறது.

ஆணையத்தை நம்பி டெபாசிட் பணம் கட்டிய சாமான்யர்களுக்கு எந்த மரியாதையும் கிடையாது.

இப்படிப்பட்ட ஒரு ஜனநாயகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே அவமானம் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.