22/01/2019

சங்கம் அமைத்துக் குடியேறும் ஒரியர்...


தரப்பட்டுள்ள புகைப்படம் திருப்பூரில் எடுக்கப்பட்டது.

இதில் கீழே உள்ள பலகையைப் பாருங்கள் 'ஒரிசா குடியேற்ற உதவி மையம்' என்று ஆங்கிலத்திலும் ஒடியா மொழியிலும் எழுதியிருப்பதைக் காணலாம்.

சென்னையில் ஒரிசா மாநிலத்திற்கான சிறப்பு தூதரகமும் விருந்தினர் மாளிகையும் ஒரு பிரமாண்ட கட்டிடத்தில் இயங்கி வருவதை ஏற்கனவே முகநூலில் பதிந்தனர்.

தற்போது தொழில் நகரங்கள் அனைத்திலும் இப்படி உதவி மையங்கள் அமைத்து தனது மக்களைக் குடியேற்றி வருகிறது ஒரிசா.

ஏற்கனவே (தமிழக வளங்களைப் பொறுத்து) தமிழக மக்கட்தொகை இருக்கவேண்டியதை விட ஒன்றரை மடங்கு அதிகம்.

இந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் ஒருகோடி வடவர் குடியேறியுள்ளனர்.

தன் மாநிலத்தை நாசமாக்கிவிட்ட ஒரியர் (பிற வடவர் போல இல்லாமல்) திட்டமிட்டு முறைப்படி குடியுரிமை பெற்று குடியேறிவருகின்றனர்.

இவர்களுக்கு ரேசன், கல்வி, அரசு வேலை, சுகாதாரம், வாக்குரிமை என அனைத்தும் நாம் நமது வரிப்பணத்தில் வழங்க வேண்டும்.

இவர்கள் சம்பாதிப்பதை தமது மாநிலத்திற்கு பத்திரமாக அனுப்பி விடுவர்.

ஐயோ பாவம்.. கூலிதானே.. போனால் போகிறது என்று நினைப்போர் வரலாற்றைத் திருப்பிப் பாருங்கள்.

நம்மை ஆளும் சிங்களவரும் தெலுங்கரும் ஒரு காலத்தில் அகதிகளாக பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.