06/01/2019

சபரிமலை செல்ல லாட்ஜில் பிரியாணி சாப்பிட்டு திட்டம் தீட்டிய பெண்கள்.. விரதமும் இருக்கவில்லை...


சபரிமலை வரலாற்றிலேயே முதல் முறையாக சன்னிதானத்திற்குள் நுழைந்து சர்ச்சை ஏற்படுத்தியவர்கள் பிந்து, கனகதுர்கா என்ற பெண்கள்.

இவர்கள் சபரிமலைக்கு செல்வதற்கு முன்னதாக டிசம்பர் 29ம் தேதி கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டையில் உள்ள சீதாலட்சுமி லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

பிந்து என்ற பெயரில் இவர்கள் இருவரும் அறை எடுத்துள்ளனர். இங்குதான் திட்டம் தீட்டி பின்னர் சபரிமலைக்குள் நுழைந்துள்ளனர் என்பது தெரியந்துள்ளது.

இவர்கள் சபரி மலைக்கு செல்வதற்காக  எந்த ஒரு விரதத்தையும் கடைபிடிக்கவில்லை. லாட்ஜில் பிரியாணி ஆட்டிறைச்சி என அசைவ உணவு சாப்பிட்டுள்ளனர்.

2 நாட்கள் தங்கி இருந்த பின்னர் 31ம் தேதி காலி செய்துள்ளனர். இவர்கள் லாட்ஜுக்கு வந்து தங்கியது, பின்னர் திரும்பி சென்றது என அனைத்தும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.  மேலும் இவர்களுடன் சில ஆண்களும் இருந்தது சிசிடிவியில் பதிவாகி உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.