08/02/2019

சாரதா சிட்பண்ட் மூலம் 4000 தமிழர் குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டுவந்தவர் மம்தா பானர்ஜி...


சாரதா சிட் பண்ட் ஊழல் இந்த ஊழல் வழக்கை கேள்விப்படாதவர்களே இருக்க மாட்டார்கள், மேற்கு வங்கம் ஒடிசா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து ஏழை எளிய மக்கள் தங்கள் உழைத்து சேர்ந்த பணத்தினை இந்த நிறுவனம் அதிக வட்டி தருவதாக அளித்த உறுதிமொழியை நம்பி பணம் போட்டனர்.

சாராத சிட்பண்ட் நிறுவனத்தின் தலைவரான சுசில் சென் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவர் இந்நிலையில் சாராத சிட் பண்ட் நிறுவனத்தில் பணம் போட்டவர்களுக்கு காத்திருந்தது பேர் இடி தவணை தொகை முடிவடைந்த நிலையில் மக்களுக்கு சேர வேண்டிய பணத்தினை நிறுவனம் திருப்பி கொடுக்காமல் நிறுவனம் காலதாமதம் செய்தது.

இதனால் பணம் போட்டவர்கள் பணத்தினை வாங்க வேறு வழியின்றி போராட்டத்தில் ஈடுபட மேற்கு வங்கம், ஒடிஷா மாநிலங்களில் வன்முறை வெடித்தது வன்முறையை கட்டு படுத்த போலீஸ் எடுத்த நடவடிக்கையில் 17 பேர் உயிரிழந்தனர் 1000 மேற்ப்பற்றோர் படுகாயம் அடைந்தனர்.

இதனை அடுத்து அமலாக்க துறை சாரதா நிதி நிறுவன மோசடியில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிந்தது மேலும் 10000 கோடிக்கு மேல் நிறுவனம் மக்களை ஏமாற்றி இருப்பதாகவும் தெரிவித்தது. இதன் விசாரணை விரிவடைய பா சிதம்பரம், மம்தாபானர்ஜி ஒடிசாவை சேர்ந்த பிஜு தன்வான் ஆகிய முக்கிய தலைவர்களின் பெயரும் அடிபட்டது.

இந்நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் எம் பி -ஐ கைது செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது இதனால் மம்தா மத்திய அரசு மீது கடுமையான குற்றங்களை முன்வைத்தார், பா சிதம்பரத்தின் மனைவி நளினியும் இதே வழக்கில் ஜாமினில் வெளியில் இருக்கிறார்.

திடீர் திருப்பமாக மேற்கு வங்க மாநில கமிஷனர் வீட்டை சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்ற போது மம்தா அதனை தடுத்து அவர்களை சிறை பிடிக்க தயாராகிவிட்டார்.

தன்னிச்சையான சிபிஐ அமைப்பை தடுக்க மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை அப்படி இருக்கையில் மம்தா ஏன் இப்படி செய்தார்?

தற்போது கமிசினர் வீட்டிலேயே உட்க்காந்து மத்திய அரசிற்கு எதிராக தர்ணா போராட்டத்தை தொடங்கி இருக்கிறார் மந்திரி வீட்டு கல்யாணத்திற்கு கூட செல்லாத மம்தா ஏன் கமிஷனர் வீட்டு வாசலில் உடகாத்திருக்கிறார்?

சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த மம்தா பானர்ஜி சாராத சிட் பண்ட் ஊழலுக்கு பிறகு மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக வந்தது எப்படி என்ற கேள்விகள் இப்போது மம்தா பானர்ஜியை நோக்கி நாடுமுழுவதும் வைக்க படுகிறது விரைவில் மம்தாவை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் எதிர்க்கட்சிகள் முன் மொழிந்து வருகின்றன.

இதில் மிக பெரிய சோகம் சாராத நிறுவனத்தில் முதலீடு செய்த 96 % பேர் தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்காகவும், படிப்பிற்காகவும் பணம் சேர்த்தவர்கள் அவர்களால் எதிர்த்து வழக்கு தொடுப்பதற்கு கூட பணமில்லை. இதில் 4000 தமிழ் குடும்பங்களும் அடக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.