14/02/2019

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


பூமியில் நீங்கள் எங்கு பார்த்தாலும் நமது மூதாதையர்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் குகைளில் வாழ்ந்து. பின்னர் அறிவில் மேம்பட்டு  நம்பமுடியாத பண்டைய தளங்களை அமைத்து வாழ்ந்து வந்தனர்.

ஆசியாவில் ஆட்சி புரிந்த மிகப்பெரிய சாம்ராஜ்யங்களில் இருந்து, அமெரிக்க கண்டத்தை தங்கள் தாய்நாடு என்று அழைத்த கணக்கற்ற பண்டைய நாகரிகங்கள் அனைத்தும். இன்று நீங்கள் பார்க்கவும் கற்பனை செய்யவும், தூண்டும், வேற்றுக்கிரவாசிகள் மற்றும் அவர்களின் பறக்கும் தட்டுகள் 'UFO' வந்து சென்றதை உறுதிப்படுத்தும் விதமாக பல குகை சித்திரங்கள் மற்றும் கல்வெட்டுகளில் பதிவுசெய்து வந்துள்ளனர்.

ஆனாலும் நமது முன்னோர்களின் இந்த விசித்திரமான பதிவுகளுக்கு நாம் பல விளக்கங்களை தந்தாலும், அவர்கள் வானில் கண்ட விளக்கம் கிடைக்காத, நம்பமுடியாத விசித்திரமான உண்மைகளையே பதிவுசெய்தனர், என்பதற்கு ஆதாரமாக நமது காலத்திலேயே ஒரு மிகச்சிறந்த உதாரணம் இருக்கிறது.

(September 1939 – 1945) இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது... ஜப்பான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த அருகிலுள்ள ஆஸ்திரேலிய தென் பசிபிக் தீவுகளில் ராணுவத் தளவாடங்களைக் குவித்ததுடன், அப்பகுதியில் விமானத் தளத்தையும் அமைத்தது. அப்போது அப்பகுதியில் வாழ்ந்த, உலகின் தொலைதூர தீவில் வசித்த ஆதிவாசி மக்கள், முதல் தடவையாக விமானங்களைக் கண்டனர்.

மேலும் அமெரிக்க போர்வீரர்களை, வானத்திலிருந்து கடவுள்கள் பறந்து வந்ததாக நினைத்தார்கள். போர் வீரர்களும் தாங்கள் கொண்டு
சென்ற மருந்து மற்றும் உணவுவகைகளை அவர்களுக்குக் கொடுக்க, ஆதிவாசிகள் உண்மையிலேயே இவர்களைக் கடவுளாக நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். விமானங்கள் தீவுகளுக்கு உணவு மற்றும் பொருட்களை வழங்கிய பிறகு,  ஒரு தூதரால் சரக்குகள் கொண்டு வரப்படும் என்று நம்பத் தொடங்கினர்.

போர் முடிந்து அமெரிக்க வீரர்கள் நாடுதிரும்பினர். ஆனால் விமான தளங்கள், பழுதுபட்ட விமான உதிரிப் பாகங்களை அப்படியே விட்டுச்சென்றனர். அமெரிக்கர்கள் ஏன் அங்கு வந்தார்கள் என்பது ஆதிவாசிகளுக்குக் கடைசிவரை தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமட்டும்தான். "ஏதோ ஒரு நோக்கத்திற்காக, வானத்திலிருந்து கடவுள்கள் வந்தார்கள். பிறகு சென்று விட்டார்கள்" என எண்ணினார்கள்.

இதன் விளைவாக, அவர்கள் ஒரு விமானம் பறக்க மேல்நோக்கி பார்த்த போது அவர்கள் ஒரு கடவுளின் பிரதியை உருவாக்க வேண்டும் என, ராணுவ உடையில் வந்த வீரர்கள் மற்றும் விமானங்களை அப்படியே மாதிரி வடிவங்களாக உருவாக்கி வழிபடத் தொடங்கினார்கள்.

பின்னர் 1946 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசாங்கம் வான்வழி ரோந்தில் ஈடுபட்ட போது, இந்த ஆதிவாசிகளின் விமான வழிபாடுகளை முதன்முதலில் கண்டுபிடித்தது. மேலும் இவர்கள் வழிபாடும் கடவுளின் பெயர்
#ஜான்_பிரம் என்று குறிப்பிடப்படுகிறது, ஏனென்றால் இந்த அமெரிக்க படைவீரர்தான் தீவில் முதலில் விமானம் மூலம் இறங்கிய கடவுளிடமிருந்து அனுப்பப்பட்ட அவர்களின் தூதர் ஆவார்.

இதைப்போலத்தான் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட ஓவியங்களும், சிற்பங்களும் வானத்திலிருந்து வந்தவர்களை அடிப்படையாகக் கொண்டு ஆதிகால மனிதர்களால் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது மறுக்கமுடியாத கருத்து. நீங்கள் என்னை சந்தேகித்தால், John Frum Cargo Cults: Remote Islanders That Worship An American G.I. இதை பற்றி ஆராய்ந்து பாருங்கள். இன்றும் அந்த ஆதிவாசி மக்களிடம் இந்த வழிபாடு உள்ளது. அமெரிக்கர்களும் அவர்களுக்கு உதவிவருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.