14/02/2019

கிறிஸ்தவ மதமாற்றம் செய்ய வற்புறுத்தி பைபிள் கொடுத்த பெண் மீது, அதிரடி புகார், காவல்நிலையத்தில் வழக்கு பதிவு...


கோவை மாவட்டம் சாமிசெட்டி பாளையத்தில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரின் மகள் பவித்ரா கோவை பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்படி, கடந்த 8 ஆம் தேதி, தனியாக நான் வீட்டில் இருந்த போது திவ்யா என்ற பெண்மணி தன் வீட்டிற்கு வந்து பைபிள் புத்தகத்தை கொடுத்து, தான் எகோவா சாட்சி என்றும், கடவுளை பற்றி சொல்ல வந்ததாகவும் தங்களுடைய கடவுள் தான் உண்மையானவர் என்று வழிபட சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியதாகவும் திவ்யா என்ற பெண்மணி மீது பவித்ரா புகார் கொடுத்துள்ளார்.

அதன்படி திவ்யாவிடம் தக்க விசாரணை மேற்கொண்டு,நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவித்ரா கேட்டுக் கொண்டு உள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.