28/03/2019

இப்போ மட்டும் எதுக்கு வந்தீங்க? தூத்துக்குடியில் பாஜக தமிழிசையிடம் வாக்குவாதம் செய்த மக்கள்..


இந்த நிலையில் தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்ய வந்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். தமிழிசை அங்கு பிரச்சாரம் செய்ய வரக்கூடாது. இப்போது மட்டும் அவர் ஏன் இங்கு வருகிறார் என்று மக்கள் கேள்வி எழுப்பினார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது எதுவும் செய்யாதவர் இப்போது மட்டும் ஏன் ஓட்டு கேட்டு வருகிறார் என்று மக்கள் அவரிடம் சண்டையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த இடத்திற்கு வந்து சமாதானம் செய்து, தமிழிசையை பிரச்சாரம் செய்ய வைத்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது, தமிழிசை பேசிய செய்தியாளர் சந்திப்பு ஒன்று இணையத்தில் வைரலானது.

1000 பேர் சாக வேண்டியது, நல்ல வேளையாக 13 பேர் மட்டுமே இறந்து இருக்கிறார்கள் என்று தமிழிசை அதில் குறிப்பிட்டு இருந்தார். இது மீண்டும் வைரலாகி பெரிய சர்ச்சையானது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.