26/07/2020

வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தார்.. பாஜக பினாமி ஏ.பி.வி.பி தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது பெண் பகிரங்க புகார்...



கார் பார்க்கிங் காரணமாக எழுந்த மோதலை தொடர்ந்து, தனது வீட்டு முன்பு சிறுநீர் கழித்ததாக ஏ.பி.வி.தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது வீடியோ ஆதாரத்துடன் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை ஆலந்தூர் காவல் நிலையத்தில் பெண் அளித்திருக்கும் புகாரில் டாக்டர் சண்முகம் அவரின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தாகவும், அறுவை சிகிச்சையில் பயன்படுத்திய மாஸ் மற்றும் இதர குப்பைகள் தனது வீட்டு வாசலில் விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார். இதுக் குறித்த சிசிடிவி காட்சிகளையும் அவர் சமர்பித்துள்ளார்.

62 வயது மதிக்கத்தக்க அந்த பெண், சுப்பையா வசிக்கும் அதே குடியிருப்பில் வசித்து வருகிறார். கார் பார்க்கிங் தொடர்பாக இந்த மோதல் வெடித்துள்ளது. சுப்பையா, அந்த பெண்ணுக்கு சொந்தமான இடத்தில் கார் பார்க்கிங் செய்ய கேட்டுள்ளார். அதற்கு அவர், ஒருகுறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில்தான் தான் டாக்டர் சுப்பையா, பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக,காவல் நிலையத்தில் புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி ஆதாரத்துடன் ஆலந்தூர் காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் இவ்வளவு பெரியதாக வெளியில் தெரிய காரணம், அந்த பெண்ணின் மருமகன், பிரபல ஸ்டாண்டப் காமெடியனும் கர்நாடக இசை கச்சேரி ஒருங்கிணைப்பாளருமான பாலாஜி விஜயராகவன் தன்னுடைய அத்தைக்கு இதுவரை எந்த நிதியும் கிடைக்கவில்லை என குரல் கொடுத்தது தான். இதுக் குறித்து அவர் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.