03/09/2020

தமிழர்கள் மறந்த கலை மாந்திரீகம்...



பண்டைய தமிழர்கள் ஆதிகாலம் தொடக்கதிலிருந்தே வானசாஸ்திரம், பூமிசாஸ்திரம், பூகோள சாஸ்திரம் என்று புகுந்த இடத்தில் எல்லாம் புகுந்து விளையாடிய தமிழனுக்கு..

ஆரம்ப காலத்தில் யுத்த நாட்களின் போது எதிரி பாசறைகளில் இந்த அம்பிறியை (ரத்தக்காட்டேறி) அலையவிட்டு எதிரிகளை கிலிகொள்ள வைத்தான் தமிழன்.

இப்போது என்ன செய்கிறான்? மலிவு விலையில் ஒரு காணியை வாங்குவதற்கு இந்த அம்பிறியை குறித்த காணியில் ரத்தகாட்டேரியாக அலையவிட்டு அந்த காணியின் விலையை அடிமாட்டு விலைக்கு வாங்க பயன்படுத்துகிறான்.

                                           
இந்த செய்வினைகளை விஞ்ஞான செயற்பாடுகளாக ஆரம்ப கால தமிழர்கள், அதாவது இதன் கண்டுபிடிப்பாளர்களும் அவர்களது வழிவந்த சில சிஷ்ய கோடிகளும் மட்டுமே அறிந்து வைத்திருந்தார்கள்.

தொழில் ரகசியம், தொழில் பாதுகாப்பு போன்ற காரணங்களால்  இதன் உண்மையான பொறிமுறை ரகசியங்களை பின்வந்த தலைமுறைக்கு சொல்லித்தராத காரணத்தால் பின்னாளில் இது வெறும் அமானுஷ்ய  சக்திகளின் வேலை என்று ஆகிப்போனது..

கி.மு 14000ம் ஆண்டுக்கு முன்னர் குமரிக்கண்டத்தில் கபாடபுரம் தலைநகராக இருந்தபோது , பாண்டியனின் அரசவையில் அறிஞராக இருந்த சிறுகூடல் பாணன் என்பவரது குறிப்பேடான "கோன் கருங்காப்பு" அதாவது கோன் என்றால் அரசன் , கருங்காப்பு என்றால் அவனது எல்லைகளை கறுப்பு விஞ்ஞானத்தால் காப்பது என்று பொருள் படும்.

இந்த குறிப்பில் தான் சில செய்வினை செய்யும் முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மறுபடியும் சொல்கிறேன் , உங்களது நன்மை கருதியும் , பிறர் நன்மை கருதியும் இதை முயற்சி செய்து பார்க்க வேண்டாம்.

சரி இப்போது அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்வினையின் செயல்முறைக்கு வருவோம்...

ஒரு செய்வினை உள்ளது, அதை வைத்துவிட்டால் , யாருக்கு செய்வினை வைக்கபடுகிறதோ அவனது வீட்டை சுற்றி பேய் நடமாட்டம் இருக்கும், அவனது வீட்டில் பேய் குடியிருக்கும். இந்த செய்வினையை ரத்தக்காட்டேறியின் துணைகொண்டு இப்போது செய்துவருகிறார்கள்.

இப்போது ரத்த காட்டெரி என அறியப்பட்ட இந்த செய்வினையின் விஞ்ஞான பெயர்"அம்பிறி". இந்த அம்பிறிதான் மருவி ரத்தகாட்டேறி ஆகி இருக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு.

சரி இந்த அம்பிறியை, அதுதாங்க ரத்தகாட்டேறியை கொண்டுவரும் வழிமுறையை பார்க்கலாம்.

இந்த எலுமிச்சை அதில கொஞ்சம், குங்குமத்தில் கொஞ்சம், இரண்டு கோழிகள், நான்கைந்து பூசணிக்காய்கள் கொஞ்சம் குங்குமம். அத்தனையும் ஒரு அக்கினி குண்டத்தின் முன்வைத்து கீழ்வரும்..

உச்சாடனத்தை 108x3தடவை ஓத வேண்டும்...

ச்ர்ரி யாகி மாத் துகா ஸி
ஸரி ஸிகா மது காதி இஸ் ஸீ
ஓம் மியாகா டது வியா
ஸியா லிகீ தமூ ஸரி
திவ் தகி கிறீம் நது வி கா
அம்றி சிகா சர்ரி யாகி மாத் துகா ஸி
தவா ஓம் மியாகா டது வியா

இந்த உச்சாடனத்தை தொடர்ந்து 324தடவை ஓத வேண்டும். ஓதும் போது அத்தனை சொற்களும் அரை மாத்திரை வடிவில் வரும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஸ்,ஸி சொற்கள் வரும் போது ரெண்டு மாத்திரை வரும்படி பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.

இவற்றை சொல்லிக் கொண்டு இருக்கும் போதே எலுமிச்சையை வெட்டி அதில் குன்க்குமத்தை தடவி தீயில் போட வேண்டும்.

பின்னர் பூசணிக்காயை வெட்டி அதில் ஏற்கனெவே வெட்டப்பட்டு கிடக்கும் கோழியின் இரத்தத்தை பூச வேண்டும்.

அதன் பின்னர் அந்த பூசணிக்காயை சிறிதாக வெட்டி அதில் விபூதி சேர்த்து அந்த விபூதியை எந்த குடும்பம் செய்வினை செய்ய வந்திருக்கிறதோ அந்த குடும்பத்தின் மேல் தூவ வேண்டும். இப்போது செய்வினை முடிந்தது.

அந்த செய்வினை பூசணிக்காயை எதிரியின் வீட்டிலோ, அல்லது தோட்டத்திலோ, அல்லது சம்மந்தப்பட்ட எல்லையிலோ புதைத்து விட்டால் செய்வினை வேலை செய்ய தொடங்கி விடும். குறிப்பிட்ட இடத்தில் பேயின் நடமாட்டம் தொடங்கிவிடும்.

அந்த குறிப்பிட இடத்தில் நாய் உருவில், ஒரு பெண்ணின் உருவில், கிழவன் உருவில், கிழவி உருவில் பேய் நடமாடுவதை எதிரி வீட்டாரும் அந்த வழியால் கடந்து போவோரும் அல்லது அந்த இடத்துக்கு வருவோரும் காணத் தொடங்கி விடுவார்கள்.

இப்போது இந்த ரத்த காட்டேறியின் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை அதாவது "அம்பிறி' தாக்கத்தை பார்த்துவிடலாம்.

குறிப்பிட்ட அந்த மந்திரத்தை 324தடவை  தமிழின் அரை, மற்றும் இரு மாத்திரை அளவில் உச்சாடனம் செய்யும் போது காற்றலையில் "செரியா" என்றொரு எதிர்மறையான அழுத்தம் உண்டாகின்றது.  இந்த எதிர் மறை அலைகளுக்கு இவ்வாறு உதாரணம் சொல்லலாம், சில இசைகளை கேட்கும் போது மனதுக்கு அமைதியும், சில இசைகளை கேட்கும் நம்மை அறியாமல் சங்கடம் மற்றும் துக்கம் தோன்றுவது இல்லையா? காரணம் அந்த இசை, காற்றலைகளில் எதிர் மறையான அலைகளை உண்டாக்குவது தான் .

இந்த "செரியா" எதிர் அலைகள் காற்றில் இருக்கும் போது எலுமிச்சைகளை வெட்டி குங்குமத்தை தடவும் போது நிகழ்வது இதுதான். எலுமிச்சையில் அடிப்படையிலேயே "பிறிம்மி" என்ற ரசாயணம் இருக்கின்றது.

குங்குமத்திலும் "ஈகலி" என்ற ரசாயணம் உள்ளது, இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து தீயிலிடும் போது அந்த வெப்பத்தின் விளைவால் இந்த கூட்டு ரசாயணம் "செரியா' எதிர்மறை அலைகளுடன் கலக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து உருவாகும் வலுவான எதிர்மறை அலைக்கு "சொய்" என்று பெயரிட்டுளான் பண்டை தமிழன்.

இப்போது பூசணிக்காய்க்கு வேலைவருகிறது, பூசணிக்காயில் இருக்கின்ற 'பன்ம" என்கிற செல்கள் இந்த எதிர் மறை அலைகளை சிறைவைக்க சரியான சிறைகள். ஆனால் இந்த செல்களை திறப்பதற்கு கோழியின் இரத்தத்தில் இருக்கின்ற "ஆடுடவிக்" என்ற ஊக்கி கொஞ்சம் தாராளமாக தேவைப்படுகின்றது.

எனவே தான் வெட்டிய கோழி இரத்தம் பூசணிக்காய் மேல் தடவப்படுகிறது. இந்த செயற்பாட்டின் பின்னர் அந்த வலுவான "சொய்" எதிரலைகள் அந்த பூசணிக்காயின் "பன்ம' செல்களில் சிறைப்படுகின்றது. இந்த செயற்பாடு மின்சாரத்தை ரான்ஸ்போர்மர்களில் அடைக்கும் செயற்பாட்டை ஒத்தது. அடைபட்டிருக்கும் சிறிய அளவு சக்தியும் வெளியேறுகையில் பெரும் சக்தியாக வெளிவரும்.

இப்போது செய்வினை வைப்பவனின் குடும்பத்தை பாதுகாக்கவேணுமே! அதுக்கு தான் இந்த விபூதி இருக்கிறது. விபூதியில் இருகின்ற "சரகாம்" என்ற வேதியல் பொருள் இந்த எதிர்மறை அலைகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த கூடியது. இதை தான் அந்த குடும்பத்தின் மீது தெளிக்கவும் அந்த அலைகளின் தாக்கம் அவர்களை விட்டு அகன்று விடுகிறது.

இப்போது "சொய்" என்ற வலுவான அலைகளை சுமக்கின்ற இந்த பூசணிக்காயை எதிராளியின் வீட்டில் புதைத்ததும் ஆட்டம் ஆரம்பமாகின்றது. ரத்த காட்டேரி தயார்! அவனவன் கண்ணுக்கு நாய் போலவும் , வெள்ளை உடையில் பெண்போலவும், கிழவி போலவும் தெரிய ஆரம்பிக்கின்றது. அது எப்படி என்று பார்க்கலாம், ஒவ்வொரு மனிதனுக்கும் அடிமனதில் ஏதோ ஒன்று தொடர்பில் உச்சா போகும் அளவுக்கு பயம் இருக்கும். அது நாய், அல்லது பாட்டி கதைகளில் வரும் இளம் மோகினி, கிழவி எதுவாகவும் இருக்கலாம். இவர்களது அடிமனதில் இருக்கும் இந்த பயங்களை இந்த "சொய்" எதிரலைகள் வெளியே உருவங்களாக நடமாட வைத்துவிடும், அடிமனது உருவங்களை கண்முன் உருவங்களாக கொண்டுவருவது தான் இந்த 'சொய்" அலைகளின் பிரதான வேலை.

அதிகபட்சமாக இந்த அலைகளின் தாக்குதல் வட்டத்தில் அதிகநேரம் இருந்தால் இருதய வால்புகளை வலுவிழக்க செய்யக்கூடியது, விளைவு வாயாலும் , மூக்காலும் ரெத்தம் வரும்.

இப்போது புரிகிறதா செய்வினை ரத்தகாட்டேரி ஒருவனுக்கு அடிப்பது எப்படி என்று.

இப்போது ஒரு கேள்வி, அது எப்படி பகலில் அடக்கி வாசிக்கும் இந்த இரத்தகாட்டேரி இரவில் மட்டும் அடிப்பது எவ்வாறு.?

இரவு என்றால் சாதாரணமகவே அனைவருக்கும் பயம் இருக்கும். எனவே இரவில் இந்த அலைகள் அதிகம் செயல்படும் வகையில் சூத்திரத்தை வகுத்தான். அதாவது இரவில் வெளியாகும் மீதேன் வாயுவுடன் இந்த சொய் அலைகள் தாக்கம் அடையும் போது தான் இதன் தாக்கம் வலுப்பெறுகிறது. ஆகவே இந்த சொய் அலைகளை இரவில் வெளியாகும் மீதேனுடன் தாக்கமடைவது போல் சூத்திரம் வகுத்து இந்த "அம்பிறியை" ஒரு இரவில் பயங்கரமாக அலைகின்ற ரத்தகாட்டேரியாக உருவாக்கினான்.

இது தான் ரத்தக்காட்டேறியின் விஞ்ஞான சூத்திரம்.

இவ்வாறு ஒவ்வொரு செய்வினைக்கும் பின்னால் ஒரு விஞ்ஞானம் ஒளிந்து கொண்டிருக்கிறது. இதை செய்வினை வைப்பவனே அறியாதது நமது துரதிஷ்டம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.