07/11/2020

கொரோனாவுக்கு பின்பு கட்டமைக்கப்படும் "புதிய உலகம்" எப்படி இருக்கும்...?

அதிநவீன டிஜிட்டல் உலகமாய் மாறியிருக்கும்...

ஒரே உலகம், ஒரே அரசு, ஒரே குடிமகன், ஒரே சட்டம், என்ற நிலையில் இருப்போம்.

ஒட்டு மொத்த அதிகாரமும் ஒருவனின் கையில் இருக்கும்.

RFID Chip ஒவ்வொரு மனிதனின் கைகளில் பொருத்தப்பட்டிருக்கும்.

இதுவே தனிமனித அடையாளம், பணப்பரிவர்த்தனை, மருத்துவம், கல்வி  வியாபாரம் பயணங்கள், விமானம் போக்குவரத்து, போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும்.

இயற்கை சுற்றுப்புற சூழல்கள் அழிக்கப்பட்டு, நம்மை சுற்றி நவீன எலெட்ரிக்கல் சாதனங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.

மிருகக்காட்சி சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் மிருகங்களை போல், மனிதர்கள் அடைக்கப்பட்டிருப்பார்கள் (சிறைச்சாலை இல்லாமல் கைதி போல்).

பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்காக அடிமையாய் நாம் இருப்போம்.

மனிதர்களை கட்டுப்படுத்தும் மற்றும் கண்காணிக்கும் பொறுப்பில், அதிநவீன ட்ரோன்கள், Artificial intelligence Robots, பணியில் அமர்த்தப்பட்டிருக்கும்.

நாம் அடிமைகள் என்பதை உணராமல் இருக்க, அதிவேக இணைய சேவைகள், அதன் உபகரணங்கள், கேளிகை விடுதிகள், போதை பொருட்கள், விபச்சாரங்கள், ஆடம்பரங்கள் என அணைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பார்கள்.

விவசாயம், விவசாய நிலம் அனைத்தும்  முழுவதும் அழிக்கப்பட்டிருக்கும்.

நமது தற்சார்பு வாழ்க்கை முறை முழுவதும் அழிக்கப்பட்டிருக்கும், 

வீட்டில் ஆடு, மாடு, கோழி, பன்றிகள்  போற்றவற்றை வளர்க்க தடை செய்யப்பற்றிருக்கும், 

Stem cells மூலம் உருவாக்கப்பட்ட செயற்கை முறை இறைச்சி விற்பனை அமலில் இருக்கும்.

உணவு, உணவு பொருட்கள், தண்ணீர், என அனைத்திற்கும், ஒரு கார்ப்ரேட் நிறுவனத்திடம் 100 சதவீதம் கையேந்தும் நிலையில் இருப்போம்.

தண்ணீர் பயன்பாட்டிற்கு, குறிப்பிட்ட அளவில் தான் போர் போட வேண்டும் என்ற சட்டம் அமலில் இருக்கும்.

தண்ணீரும், மின்சாரமும் குறிப்பிட்ட அளவே விநியோகம் செய்யப்படும்.

சுவாசிக்கும் காற்றிற்கு ஒரு கார்ப்ரேட் நிறுவனம் உரிமம் வாங்கியிருக்கும்.

குழந்தைகள் பெற்றுக்கொள்ள முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கும்.

தடுப்பூசி வழங்கவோ, பிற மருத்துவ பரிசோதனைகள் செய்யாவோ, பெற்றோர்களிடமோ, யாரிடமோ அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை, என்ற சட்டம் இருக்கும்.

இயற்கை முறை வைத்தியம், பாரம்பரிய முறை வைத்தியம் என அனைத்தும் தடை செய்யப்பட்டிருக்கும்.

கடல் பகுதிகள் அனைத்தும் தனியார் வசம் இருக்கும்.

சிறு, குறு வணிகம் முழுவதும் ஒழிக்கப்பட்டிருக்கும்.

தங்கம் மற்றும் சொத்துக்கள் குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும். 

நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும், கனிமங்கள், இயற்க்கை வளங்கள் அனைத்தும் அரசுக்கே சொந்தம் என்ற சட்டம் இருக்கும்.

மலைப்பகுதிகளில் மக்கள் வாழ தடை செய்யப்பட்டிருக்கும். மேலும் மக்கள், காடுப்பகுதிகள், மலைப்பகுதிகளுக்கு செல்லவும் தடை செய்யப்பட்டிருக்கும்.

2030ஆம் ஆண்டில் இவையெல்லாம் சாதாரண செய்தியாகவே இருக்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள பலவற்றிக்கு, தற்போதே அடித்தளம் போட்டுவிட்டார்கள். நாம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு புது உலகை உருவாக்க திட்டமிட்டுள்ளனர், சுற்றி பாருங்கள் தெரியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.