02/11/2020

இந்தியாவின் தேசிய பறவையும் உண்மை நிலவரமும்...

 


இந்தியாவின் தேசிய பறவை என்னவென்று கேட்டாள் உடனே நாம் சொல்வோம் மயில் என்று...

ஆனால் இந்தியாவின் தேசிய பறவையாக எதை தேர்தெடுக்கலாம் என்று சில பறவைகளின் பெயர்களை பரிசீலனை செய்தார்கள்...

மயிலை தவிர எல்லாமும் ஒரு கட்டத்தில் நிராகரிக்க பட்டது..

மயிலுக்கு நிகராக அதிக வாக்கு பெற்ற ஒரு பறவை இனம் தான் கானமயில் என்றோரு பறவை..

மயிலுக்கு எப்படி சில தனித்தன்மை இருக்கிறதோ அதே போன்று இந்த கானமயில் பறவைக்கும் சில தனி தன்மை இருக்கிறது..

இன்னும் சொல்லப்போனால் இப்பொழுதுள்ள தேசிய பறவை மயிலை விட அதிக ஒட்டு வாங்கியது இந்த கானமயில் தான்..

இருப்பினும் புராணங்களில் மயிலை பற்றி சொல்வதால் ஒட்டு குறைவாக இருந்தாலும் மயிலை தேசிய பறவையாக இந்திய அரசு 1930 ஆண்டு தெரிவித்தது..

உண்மையில் இந்தியாவின்  தேசிய பறவையாக கானமயில் தான் வந்து இருக்க வேண்டும்..

புராணம் என்ற ஒரு விஷயத்திற்க்காக இந்த பறவை நீக்கப்பட்டு மயில் தேசிய பறவையாக ஆகியது..

அதன் விளைவு இன்று இந்த கானமயில் இந்தியாவில் 500 க்கும் குறைவாகவே உள்ளது கவனிக்கப்படாமையே காரணம்..

இராஜஸ்தான் மாநில பறவையாக இன்றும் கூட இந்த கானமயில் தான் உள்ளது..

தேசிய பறவை அந்தஸ்தை பெற வேண்டிய இந்த கானமயில் இன்று மாநில பறவையாக உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.