07/03/2021

என்னவள்...

 


காதல் கவிதை ஒன்றை

படைக்க கேட்டாள்...

காகிதத்தில் எழுதி வைத்தால் 

செல்லரித்துப் போகும்...

உன் இதழ் வரிகளில்

ஒரு கவிதை படைக்க வா

என்றேன்...

வெட்கத்தால் ஒரு கரம் கொண்டு

கண்களை மூடி...

மறு கரம் கொண்டு

என்னை இறுக்கி அணைத்து...

என் மார்பில் சாய்ந்தாள்

அங்கே... 

என் இதயம் சொல்லும் 

கவிதைகளை கேட்டிருப்பாளோ...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.