07/03/2021

அப்பா Vs அம்மா Vs மகன்...

கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்...

மனைவி : வந்துட்டீங்களா... உங்களைத் தான் தேடிக்கிட்டே இருந்தேன்..

கணவன் : ஏன்?... என்னாச்சு..?

மனைவி : இன்னைக்கு ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்,... நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன்...

கணவன் : சரி..

மனைவி : இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது.. அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் நிம்மதி..

கணவன் : கலவரப் பீதியில்... நமக்கெதுக்கும்மா இந்த வம்பு? மன்னிச்சு விட்டுட வேண்டியதுதானே..

மனைவி : மன்னிக்கிறதா? அந்த பேச்சுக்கே இடமில்ல. எங்க அந்த உருட்டு கட்டை..... (என்று தேடிக் கொண்டே செல்ல...)

வாசலிலிருந்து வந்த மகன்...

 மகன் : யப்பா... சீக்கிரம் ஓடிடுப்பா...

அப்பா : ஏண்டா..?

மகன் : நான் தான் கோபத்துல தாத்தாவ திட்டிட்டேன்பா..

அப்பா : அடப்பாவி மகனே.. வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிகிட்டு அலைய வேண்டியதா இருக்கே..

அய்யய்யோ ... இப்ப நான் என்ன செய்வேன்.. எங்க போவேன்...?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.