06/05/2021

நானும் அவளும்...

 


உன்னை ஒருபோதும் விட்டு விலக மாட்டேன் என்றாய் நம்பினேன்.

உனக்காகத்தான் நான் படைக்கப்பட்டிருக்கிறேன் என்றாய் நம்பினேன்.

உன் அளவுக்கு யாராலும் என்னை நேசிக்க முடியாது என்றாய் நம்பினேன்.

நான் என்றென்றும் உனக்கானவள் என்றாய் நம்பினேன்.

நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்றாய் நம்பினேன்.

சீக்கிரம் இருவரும் சேர்ந்து வாழ்வோம் என்றாய் நம்பினேன்.

நான் உன்னை பிரிந்தால் உயிரோடு இருக்க மாட்டேன் என்றாய் நம்பினேன்.

எல்லாவற்றையும் நம்பி விட்ட பழக்க தோஷத்தில் உனக்கு பொய் சொல்ல தெரியாது என்றும் நம்பி விட்டேன்...

😒😒😒

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.