26/07/2021

கல்லறையிலும் உன் நினைவுகளை சுமப்பேன்...

 



உன் நினைவுகளை எனக்குள்
புதைத்துவிட்டு..

நீ எங்கே சென்று இருந்தாய்...

உன் வருகைக்காக காத்திருந்து
காத்திருந்து...

நான் வாடியது தான் மிச்சம்...

உன்னை நினைத்து நான்
என் நண்பர்களை தொலைத்தேன்...

என் வாழ்கையும் தொலைத்து
கொண்டு இருக்கிறேன்...

நீ என்றாவது 
உன் மழலையோடு வரும் போது...

நான் இருப்பேன்... கல்லறையில்..

உன் நினைவுகளை சுமந்தபடி...

கண்களில் இரத்த கண்ணீருடன்
உன் முன்னால் காதலன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.