26/07/2021

கணவன் Vs மனைவி கலாட்டா...

 




கணவர் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்து... சாப்பிட உட்கார்ந்தார்...

 சாப்பாடு நல்லா இல்லை, டேஸ்ட் எதுவும் தெரியவில்லை என்றார்..

மனைவி அமைதியாக எழுந்தாள், அவள் கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணி ஆம்புலன்ஸ் அழைத்தாள்.
 
அவருக்கு டேஸ்ட் தெரியவில்லை..
கொரோனா சாத்தியம் போல் தெறிகிறது என்று...

ஆம்புலன்ஸ் வந்தது, கணவரை அழைத்துச் சென்று 14 நாள்கள் தனிமைப்படுத்தியது. 

மருத்துவமனையில் இருந்த கணவனை, மனைவி அழைத்து, கேட்டார்: இப்போதாவது சுவை தெரிந்து இருக்குமே?

எல்லோரும் இக்கதையைக் கேட்டு இருப்பீர்கள். ஆனால், இப்போது கதையில் புதிய திருப்பத்தைக் காண்க...
 
மறுபுறம், கணவரிடம்  கேட்கப்பட்டது..

உங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார்?

 கணவர் மிகவும் அமைதியாக கூறினார்..

 - என் மனைவி
 - என் மாமியார்
 - என் மாமனார்
 - என் மச்சான்

இப்போது மனைவி உட்பட அத்தனை நபர்களும்  மருத்துவமனை படுக்கையில் அமர்ந்து இருக்கிறார்கள்...

கணவனைப் முறைத்து கொண்டு இருக்கிறார்கள்...

கணவன் : அடியே குந்தாணி யாருகிட்ட 😁

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.