16/09/2021

மறந்து விட்டேன் உன்னை.. உன் நினைவுகளை அல்ல...

 




காலங்கள்
வலிகளையும் ஆற்றும்...

எத்தனை உண்மை
என்பதை நானும் உணர்ந்தேன்...

நீ கொடுத்த
வலிகளை மறந்துவிட்டேன்...

உன் நினைவுகளை
மட்டும் மறக்க முடியவில்லை...

நம் பாதங்களை தழுவி
சென்ற கடல் அலைகள்...

எதுவென்று நம்மால்
பிரித்து பார்க்க முடியாது...

என் சுவாசத்தில் கலந்த உன்
நினைவுகளும் அதுபோலவே...

என்
சுவாசங்கள் நின்றாலும்...

எழுத்து வடிவில் உலாவரும்
பூமியில் உன் நினைவுகள்...

உன் கழுத்திற்கு வேறு கைகளில் 
தாலி கட்டிக் கொண்டாய்...

நானோ என் நினைவில்
இருக்கும் உனக்கு...

தாலி கட்டி வாழ்ந்து
கொண்டு இருக்கிறேன்...

உன் நினைவுகளோடு
கணவன் மனைவியாக...

நீ கொடுத்த
வலிகளை மறந்தேன்...

உன்
நினைவுகளை அல்ல.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.